யாழ்ப்பாணம் பருதித்துறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற பருதித்துறை மீனவர்களின் மீன்பிடிப் படகு மீது இந்திய மீனவர்களின் றோலர் படகு மோதியால் பருதித்தித்துறை மீனவர்களின் படகு சிதைந்துள்ளது.
சம்பவத்தின் போது ஆபத்தை உணர்ந்து கடலில் குதித்த பருதித்துறை மீனவர்கள் மூவர் அதிஸ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் குறித்த வன்முறை இடம்பெற்றதாக கரை சேர்ந்த மீனவர்கள் பருதித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
படகு மீது மோதிய றோலர் படகு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் நீந்தித் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மூவரையும் மற்றொரு படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எதேச்சையாகக் கண்ணுற்று காப்பாற்றி கரை சேர்த்திருக்கின்றனர்.
கரையிலிருந்து 13 கடல் மைல் தொலைவிற்குள் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்